தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள்..பொதுப்பணித்துறை அதிகாரியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை!
![]()
வில்லியனூர் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை நடத்தினார்.
வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை மேற்கொண்டார்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீர செல்வம் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டையில் குளம் கட்டுதல், நீர்ப்பாசன வாய்க்கால் மீது கான்கிரீட் சுவர் எழுப்புதல், சாலை அமைத்தல், பயணியர் நிழற்குடை, வில்லியனூர் கஸ்தூரிபாய் திருமண நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல், வில்லியனூர் நான்கு மாட வீதிகளில் உள்ள ‘யு’ வடிவ வாய்க்கால் சீரமைக்க வேண்டும். ஏஎப்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் எஸ்எம்விபுரம் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தல், துறை மூலம் அமைக்கப்பட்ஐ எறியாமல் உள்ள ஹைமாஸ் மற்றும் மினிமாஸ் விளக்குகளை எறிய வைக்க செய்தல், பெரியபேட் வாய்க்கால் கான்கிரீட் சுவர் எழுப்புதல், வி. மணவெளி, ஜி.என்.பாளையம் கிராமத்தில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், தில்லை நகர், கொம்பாக்கம் கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், மகேஸ்வரி நகர், விஷ்வேஸ்வரி நகரில் புதிய குடிநீர் குழாய் அமைத்தல், ஆத்துவாய்க்கால்பேட் நீர்ப்பாசன வாய்க்கால் மீது கான்கிரீட் சுவர் எழுப்புதல், வி. தட்டாஞ்சாவடி கிராமத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் மீது சிறிய பாலம் அமைத்தல், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் யு வடிவ வாய்க்கால், சிவ கணபதி நகரில் நீர்ப்பாசன வாய்க்கால் மீது கான்கிரீட் சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அப்பணிகள் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், செயற்பொறியாளர்கள் கஜலட்சுமி, ராதாகிருஷ்ணன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடனிருந்தனர்.

