விழுப்புரத்தில் புதிய மினிபஸ் திட்ட சேவை துவக்கம்!
விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், விழுப்புரம் மாவட்டத்திற்கான புதிய விரிவான மினிபஸ் திட்ட சேவையினை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டன,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 16.06.2025 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில், காணொளி காட்சி வாயிலாக போக்குவரத்துத் துறை சார்பில், புதிய விரிவான மினிபஸ் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் அவர்கள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கான புதிய விரிவான மினிபஸ் திட்ட சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உதவி ஆட்சியர் பயிற்சி ரா.வெங்கடேஷ்வரன் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.