தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின்புதிய நிர்வாகிகள் தேர்வு!
கிருஷ்ணகிரியில் ,தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 6வது பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025 – 2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது.
இத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக திரு.சுதர்சன் குமார் ,தேர்தல் பார்வையாளர்களாக P.S. குமார், ஆகியோர் கலந்து கொண்டு, தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்தலில் மாநிலத் தலைவராக R.பழனிசாமி துணைத் தலைவராக சிக்கந்தர் மற்றும் பொதுச் செயலாளராக ஜெய்சங்கர் பொருளாளராக டென்சிங் மற்றும் செயற்குழு உறுப்பினராக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொறுப்பேற்றுக் கொண்டனர் .
இக்கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டி கொடுப்பது அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு பெறுவது அரசு நலத்திட்ட உதவிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பெற்று தருவது உள்ளிட்ட தீரமானம் நிறைவேற்றப்பட்டது முடிவில் முன்னாள் செயலாளர் மோகன் நன்றி கூறினார்