வசந்த் உற்சவம் என்னும் இசை நாட்டிய நிகழ்ச்சி..பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சனுக்கு கரியாலி விருது!
வசந்த் உற்சவம் என்னும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் 11 நாட்கள் நடைபெறுகிறது.
சரஸ்வதி கல்வி பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் வசந்த் உற்சவம் என்னும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.இவ்விழாவினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜகத் மோகினி கவுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.
சரஸ்வதி கல்வி பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனரும் முன்னாள் ஐ.ஏ.ஏஸ் அதிகாரியுமான திருமதி கரியாலி ஏற்பாட்டிலும், செயலாளார் பிரியதர்ஷினி முன்னிலையிலும் நடைபெற்ற இந்திகழ்ச்சியின் சிறப்ம்சமாக பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சனுக்கு இந்திரா கரியாலி விருதும், நாட்டிய கலாரத்னா பட்டமும் வழங்கப்பட்டது.மேலும், சமூக சேவகர்களான ஸ்ரீ விஜய் மோகன் கவுல், ஸ்ரீ அசுதோஷ் ரெய்னா மற்றும் வேத அறிஞர் ஸ்ரீ ராஜ்குமார் ஜோஷி ஆகியோருக்கு காஷிநாத் கரியாலி விருதும் வழங்கப்பட்டன.
சைவ சித்தாந்தத்திற்காக, டாக்டர் பனசாய் மூர்த்திக்கு பொறியாளர் குப்புராஜ் விருதும், சைவ சித்தாந்தமணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் யோகா மற்றும் பரதநாட்டியத்திற்கான பங்களிப்பை பாராட்டி குரு யாமினி முத்தண்ணாவுக்கு மே 3, 2025 அன்று கௌரவிக்கப்படுவார்.சரஸ்வதி கல்வி பண்பாட்டு அறக்கட்டளையின் இந்த வசந்த உற்சவம் விழா தொடர்ந்து 11நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.100 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், இசை, நாட்டிய கலைஞர்கள் என கலந்து கொண்ட நிகழ்ச்சியின் முடிவாக மீனாட்சி சித்தரஞ்சன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன் இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-எனக்கு இந்திரா கரியாலி விருதும், நாட்டிய கலா ரத்னா பட்டமும் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அளித்தது மிகவும் பெருமையாக கருதுகிறேன். திருமதி கரியாலி அவர்கள் சரஸ்வதி கல்வி பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் இவ்வாறு ஒரு விழாவை சிறப்பாக நடத்தி வருவது கலைஞர்கள், ஆன்மீக அறிஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்..