நெமிலி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா!!!
நெமிலி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா!!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா, மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் நல்லாசியுடன் மாவட்டத் தலைவர் இரா. விநாயகம் தலைமையில் பனப்பாக்கத்தில் நடைபெற்றது.
நெமிலி வட்டாரச் செயலாளர் நா.சுப்பிரமணிவரவேற்புரை ஆற்றினார்.மாநில தலைமை நிலையச் செயலாளரும், இராணிப்பேட்டை மாவட்ட ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்பாளருமான பா.பாலமுருகன்
சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு,
பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கி.எல்லப்பன், பாராட்டி, மாநில அமைப்பின் சார்பாகசந்தன மாலை, பொன்னாடைஅணிவித்துகேடயமும்நினைவுப்பரிசும்வழங்கி சிறப்புரைஆற்றினார்.இதில்வட்டாரஓய்வுபிரிவுசெயலாளர்இரா.அருள்ஜோதி,வட்டாரத் தலைவர் ஏ.சரவணன்,வட்டார மகளிரணிச் செயலாளர் கோ.பொற்கொடி, மேனாள் வட்டாரத் தலைவர் சு.தண்டபாணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணைச் செயலாளர் கோ.சிவக்குமார்,மாவட்ட பொருளாளர் அ.பிரகாசம், அரக்கோணம் கல்வி மாவட்ட செயலாளர் க.வாசுஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணிநிறைவு பெற்ற சு.கொளத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஜாக்டோ-ஜியோ இராணிப்பேட்டைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஸ்ரீதர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
இதில் காவேரிப்பாக்கம் வட்டாரச் செயலாளர் மோ.பாஸ்கரன்,வட்டாரத் தலைவர் வே.ருக்மணி,வட்டார பொருளாளர் ஏ.தாவீது, வட்டாரச் செயலாளர் கோ.தமிழ்ச்செல்வன்,சோளிங்கர் வட்டார செயலாளர் அ.மகேஷ்பாபுஆகியோர் பாராட்டி பேசினர்.
மேலும், நெமிலி ஒன்றிய ஆசிரியர்கள் உத்தமன், வெங்கடேசன், ஆறுமுகம், கோதண்டன், சுந்தரமூர்த்தி, மெய்யன்பன், தனபால், சுரேஷ், பாலாஜி, தனசேகர், கோபிநாத், ராமச்சந்திரன், நாகராஜன், இராஜேஸ்வரி, வனிதா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இறுதியாக வட்டார பொருளாளர் க.தாஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.