இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி.. மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்ற இளம் பெண்!

Loading

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 897-வது இடத்தினை பெற்று தேர்ச்சி பெற்ற கூடலூர் வட்டத்தினை சார்ந்த சௌந்தர்யா என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், கூடலூர் வட்டத்தினை சார்ந்த சௌந்தர்யா என்பவர் கூடலூர் வட்டாட்சியர் அலுவகத்தில் நேரடி நியமன உதவியராக பணியாற்றி வந்த நிலையில், இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் இந்திய அளவில் 897-வது இடத்தினை பெற்று தேர்ச்சி பெற்றமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

 

0Shares