ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தோர்க்கு ராணிப்பேட்டை பாஜக அஞ்சலி!
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகளால் இந்து என்பதால் மட்டுமே படுகொலை செய்யப்பட்டனர், இந்த கொடூர தாக்குதலால் உயிரிழந்தோர்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து மண்டல் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் நெமிலி ஆனந்தன் கலந்துகொண்டு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.