அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்…வி.சி.க.பேரணி.,!

Loading

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி நேற்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் அரசியல் அங்கீகார வெற்றி பேரணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் டாக்டர்.எஸ்.எம்.சாதிக் தலைமையில் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் வளவன் வாசுதேவன் மற்றும் வசந்த், மாவட்டச் செயலாளர்கள் கமலநாதன், மிசா தங்கவேல், அந்தியூர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அங்கீகார வெற்றி பேரணி அணிவகுப்பு நடைபெற்றது. இந்தப் பேரணியானது ஈரோடு ஜவான் பவன் பில்டிங் அருகில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா வரை மேளதாளங்களுடன், புலி போன்று வேடம் அணிந்து புலியாட்டத்துடன், வர்ண காகிதங்கள் பறக்க, நடனத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சியின் கொடியை ஏந்திக்கொண்டு அங்கீகார வெற்றி சின்னமான பானை சின்னத்தை ஏந்தி கொண்டும் வெற்றி அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன், விசிகவை சேர்ந்த நிர்வாகிகள் மு.அம்ஜத் கான், ஜெ.பைஜுல் அகமது, பால்ராஜ் ,ஆனந்த், துரைபாலு, ரேவந், கதிரவன்,அக்பர் அலி, சித்திக், சௌமியா, ரேவதி, ராஜவேல் ராஜாமணி, சங்கீதா, அரவிந்த், விக்னேஷ், நிஷாந்த், பொன்னையன், நந்தகுமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சி செலுத்திய பின்னர் சமத்துவ நாள் உறுதி மொழியை மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சாதிக் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

0Shares