மீண்டும் மஞ்சப்பை

Loading

 

மீண்டும் மஞ்சப்பை

விழுப்புரம்மாவட்டம்மேல்மலையனூர் வட்டம், கோட்டைப்பூண்டி அரசு  மேல்நிலைப் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவர்களிடையே இன்று (10.01.2024.)ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் சு குமரவேல் வரவேற்றார்  பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை தாங்கினார் .மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் திரு முகமது அலி சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில்  அவலூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன்,கிராம நிர்வாக அலுவலர்கள் காளிதாஸ், ராமமூர்த்தி மற்றும் கிராம உதவியாளர்கள் கிராம பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே கட்டுரை போட்டி ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

0Shares

Leave a Reply