முத்தக்காட்சியில் நடிக்க ரூ.1 கோடி கேட்கும் அனுபமா பரமேஷ்வரன்

Loading

முத்தக்காட்சியில் நடிக்க ரூ.1 கோடி கேட்கும் அனுபமா பரமேஷ்வரன்

கடந்த 2015-ல் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுபமா பரமேஷ்வரன். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதையொட்டி தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.தொடர்ந்து தமிழில் ‘கொடி’ படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார்.
அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் ‘சைரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் பட வாய்ப்புக்காக படுக்கை அறையில் நடிக்க தயாராக இருப்பதாகவும், ‘லிப் லாக்’ காட்சிகளில் நடிப்பதற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு நடிகை அனுபமா பரமேஷ்வரன் படங்களின் தொடர் வெற்றியால் தன் சம்பளத்தை உயர்த்தியதாக செய்தி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *