மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாதக்காலத்திற்கு நீட்டிப்பு

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று

மனை  வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாதக்காலத்திற்கு நீட்டிப்பு  செய்த தமிழக அரசுக்கும் ,மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

எங்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நிகழ்ச்சி கடந்த 22/12/2022 அன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள “லீ ராயல் மெரிடியன் ஓட்டலில்” நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தங்கள் முன் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மனை வரன்முறை சட்டம் கால நீட்டிப்பு செய்து தர வேண்டும் என்கிற கோரிக்கையும் பிரதானமாக முன் வைக்கப்பட்டது.

தாங்கள் அந்த மேடையிலேயே மனை வரன்முறை சட்டத்தை வாய்மொழியாக மேலும் ஆறு மாத காலம் கால நீடிப்பு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தீர்கள்.

அதற்காக தாங்கள் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரிடம் ஒப்புதல் பெற்று தற்பொழுது மனை வரன்முறை சட்டம் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து  அரசாணையும் (அரசாணை (நிலை) எண். 188/2023) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தங்களுக்கும், தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அவர்களுக்கும், நகர் ஊரமைப்பு இயக்குனர் (DTCP) அவர்களுக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) உறுப்பினர் செயலர் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும்,  மேற்கண்ட FAIRA கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *