மாற்றுத் திறனாளிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம்.

Loading

ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தைய
ஊராட்சியில்மாற்றுத் திறனாளிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளிமந்தையம் ஊராட்சியில் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் வசிக்கும் மாற்று திறனாளிகள்  எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கான கோரிக்கைகளை கேட்டு  நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம்பழனி  கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது  இந்நிகழ்வில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி முன்னிலை வகித்தார் மேலும் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர் ராஜாமணி ,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கா பொன்ராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் தலைவர், பி.சி தங்கம், இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன்,ஊராட்சி மன்ற செயலர் ராஜாமணி இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இச்சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை பெறுதல், முதலமைச்சர் காப்பீடு திட்டம் அட்டை பெறுதல், இலவச வீட்டு மனை பட்டா ,வங்கி கடன், புதிய செயற்கை கால் பொருத்துதல் இலவச வீல் சேர், மூன்று சக்கர வாகனங்கள், காதொலி பெறுதல் இயற்கை  விபத்து நிவாரண நிதி பெறுதல், திருமண நிதி உதவி , கடும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே பெற்றுக் கொண்டிருந்த ரூ.1000 / உதவித்தொகைலிருந்து அவர்களுக்கு ரூபாய் 2000/ உதவித்தொகையாக உயர்த்தி வழங்குதல்,  உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கயும் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கான கோரிக்கை மனுக்களை பெற்று இக்கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *