விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வேளாண் உற்பத்தி பொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்துதல்
வேலூர் மாவட்டம் அரியூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மருதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று பார்வையிட்டுவிவசாயிகளிடமிருந் து பெறப்படும் வேளாண் உற்பத்தி பொருட்களை சிறப்பாக சந்தைப்படுத்துதல் மற்றும் இந்நிறுவன செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேஷ், வேலூர் வட்டாட்சியர் செந்தில் , மற்றும் மருது உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.