17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த
திருவள்ளூர் அடுத்த மோவூரில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி 17 வயது சிறுமி மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் பாலியல் தொந்தரவு செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டியதால் சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து செப்டம்பர் மாதம் 27-ந் தேதி திருவள்ளூர் எஸ்பி அலுலவகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தீக்காயங்களுடன் சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பென்னலூர்பேட்டை காவல் துறையினர், 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ பதிவு செய்ததும், தற்கொலைக்கு தூண்டியதும் உறுதியானது.இதனையடுத்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அஜித் குமார் (25),ஞானமூர்த்தி(20), ராசு(23) மற்றும் அஜித்(26) ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கடந்த 6 மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மோவூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.