ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Loading

ஆசிரியர்களின் நலனை காக்க ரூ.225 கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில்,
* அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.* மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை மெருகேற்றிக் கொள்ள ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.* அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்.* கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுதும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் நடைபெற்ற கலை திருவிழாவில் 25 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.* கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.* படிப்புத் திறனும், படைப்பு திறனும் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.* மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *