தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

Loading

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், ரூபாய் 32.50 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான்கோட்டை ஊராட்சி, அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கலையரங்கம் அமைக்கும் பணி மற்றும் டொக்குபோதனஅள்ளி ஊராட்சி, பூவல்மடுவு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் இருந்து ரூபாய் 17.50 இலட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் அமைக்கும் பணி ஆகிய இரண்டு பணிக்களுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்கநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பாகலஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிஅறிவு, ஒன்றிய குழு உறுப்பினர் த.காமராஜ், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராணி சுப்ரமணி, ஊராட்சி செயலாளர் ஜெயராமன், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன்,ஒன்றிய அமைப்பு செயலாளர் முத்து, பசுமைத் தாயக ஒன்றிய தலைவர் குமார், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், வார்டு உறுப்பினர்கள் முருகன், சித்ரா, குமார், பத்மாபெருமாள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply