61 வது அமர்வு (UNCSocD 61) -மெய்நிகர் துணை நிகழ்வு. நியூயார்க் H.Q சென்னையில் நடைபெற்றது
சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் 61 வது அமர்வு(UNCSocD 61) -மெய்நிகர் துணை நிகழ்வு. நியூயார்க் H.Q
சென்னையில் நடைபெற்றதுநிகழ்ச்சி ஏற்பாடு செய்தது: உழைக்கும் மகளிர் சங்கம் இந்தியா பெண்களுக்கான இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம் லிட்உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய கூட்டுறவு மகளிர் இணைப்புமையமானது ஐக்கிய நாடுகள் சபையின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 61’வது (UNCSocD 61) அமர்வில் உலக அளவில் ஒரு துணை நிகழ்ச்சியைநடத்துவதற்கான பெருமையை பெற்ற ஒரே கூட்டுறவு நிறுவனம் ஆகும். இந்நிகழ்வு 2030 உலகளாவிய நிகழ்நிரலை நோக்கி உற்பத்தி திறனை
மேம்படுத்துவதில், சமத்துவமின்மையை எதிர்ப்பதில் கூட்டுறவு நிறுவனங்களில்இளம் பெண்களின் பங்கு ” என்ற தலைப்பில் சென்னை தலைமையகத்தில் நடைபெற்றது. பல்வேறு தொழில்களில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
பத்மஸ்ரீ மறைந்த டாக்டர் எச்.எஸ் ஜெயா அருணாச்சலம் விருது பெற்றவர்கள்1.செல்வி சுந்தரி தேவராஜ் ( 54 வயது ) காஞ்சிபுரம் கிளை,
25 ஆண்டுகள் கடன் பெற்று கூலி வேலையிலிருந்து தறி உரிமையாளராகமாறியவர்2.செல்வி. போடு ருத்து (35 வயது), நரசாப்பூர் கிளை
11 ஆண்டுகள் கடன் பெற்று தினக் கூலியாக இருந்து சுய தொழில்தச்சராக மாறியவர். போன்ற பல்வேறு பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது தென்னிந்தியாவில் 4 மாநிலங்களில் உள்ள 14 கூட்டுறவு நிறுவனங்களிலிருந்துவெகுஜனத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு கேள்வி பதில் அமர்வின்போது
தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்..