திமுக தலைவர் மு க .ஸ்டாலின் அவர்களுக்கு ஈரோடு இடைத்தேர்தலுக்கு ஆதரவு கடிதம்

Loading

பெருமதிப்பிற்குரிய திமுக தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களின்  பணிவான வணக்கம்.
தமிழ்வேள், செம்மொழி காவலர், முத்தமிழறிஞர், சமூக நீதிக் காவலர், சமத்துவத் தலைவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், இந்திய துணை கண்டத்திலேயே தமிழ்நாட்டை எல்லா துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்றம் செய்து ஏற்றம் செய்திட,
நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில், அல்லும் பகலும் அயராது உழைத்து மகத்தான மக்கள் பணியை முன்னெடுக்கும் தங்களின் கரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில்,எதிர்வரும் 27/02/2023 அன்று நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  கூட்டணியில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகின்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரு.EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து,தங்களின் தலைமையில் அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்று வாக்கு சேகரித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற  செய்ய,அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பில்  எங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கிறோம் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்என்று அதன் நிறுவனத் தலைவர் ஆ.ஹென்றிஅவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0Shares

Leave a Reply