குப்பைகள்,கட்டுமான கழிவுகள்அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை ராயபுரம் அரத்தூன் ரோடு வார்டு50ல் உருது பள்ளி சுவற்றின் பின்புறம் இடையே குப்பைகள்,கட்டுமான கழிவுகள்,சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிவருவதால் பள்ளி குழந்தைகள் பொதுமக்கள் கடந்து செல்லும் போது துற்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் செய்தி அலசல் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன் எதிரொலியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குப்பைகளை அகற்றினர்.செய்தி வெளியிட்ட செய்தி அலசல் நாளிதழுக்கும் துரித பணி செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.மேலும் பள்ளியின் சுவற்றின் பின்புறம் வாகனங்களை நிருத்துவதால் சமூக விரோதிகள் அவ்விடத்தில் மது அருந்த ஏதுவாக இருப்பதாகவும் பள்ளி செல்லும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து காவல்துறையினர்,சட்டம் ஒழுங்கு காவல் துறை வாகனங்களை நிருத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை.பள்ளி சுவற்றின் இடுக்கில் குப்பைகள்,கட்டுமான கழிவுகள் இனி சேமிக்கபடுவதை தடுக்க சென்னை மாநகராட்சி இணை பொறியாளர் கவனத்தில் கொண்டு துரிதபணியாக அந்த சுவற்றின் இடுக்கின் பகுதியை உடனடியாக உடைத்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.