பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் நேரில் வாழ்த்து :
பாமக மாநில இளைஞர் சங்க செயலாளராக பொறுப்பேற்றுள்ள பாலா என்கிற பாலயோகியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. காலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பாலா என்கிற பாலயோகிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகரில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான இ.தினேஷ்குமார், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள் நா.வெங்கடேசன்,யோகநாதன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் பூபதி உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். வாழ்த்துக்களை சொல்ல வந்தவர்களுக்கு மரக்கன்றுகளையும் பிறந்த நாள் நினைவாக வழங்கினார். மேலும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் உடல் பரிசோதனை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அறுசுவை அசைவ உணவு விருந்தும் அளிக்கப்பட்டது.