பண்ருட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Loading

பண்ருட்டி, நவ.28-  கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர திமுக சார்பில் கழக மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. நகர மன்ற தலைவரும் திமுக நகர கழக செயலாளர் இராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட அவை தலைவர் டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தந்தை பெரியார் டிப்போ அருகில் தொ.மு.ச நிர்வாகிகளுடன் கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பிரட், ரஸ்க்  வழங்கப்பட்டன. பண்ருட்டி நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் தணிகை செல்வம்,  ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தென்னரசு, நகர அவை தலைவர் ராஜா‌, நகர பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி பிரபு,  நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன், நகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர், 21 வது வார்டு செயலாளர் எசி.ஆர் சுரேஷ்,  நகர மாணவரணி அமைப்பாளர் ஏபிடி. சரவணன், நகர துணை செயலாளர் சசி, நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத்,  துணை அமைப்பாளர்கள் பார்த்திபன்,  பாலச்சந்தர், ராஜா, மதி, கிரி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், கழகத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *