முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் உரையாடல்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி (Offline) மூலம்  நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட சுப்புராஜ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் தங்கும் விடுதியினை திறந்து வைத்ததை தொடர்ந்து, இவ்விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன்,  அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், போடிநாயக்கனூர் நகராட்சி நகர்மன்றத்தலைவர் எஸ்.ராஜராஜேஸ்வரி, துணைத்தலைவர் கிருஷ்ணவேனி, நகராட்சி பொறியாளர் செல்வராணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *