திருமலைக்குமாரசாமி திருத்தேரோட்டம்

Loading

பைம்பொழில்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமான பண்பொழி (பைம்பொழில்) அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று விமரிசையாக சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று திருமலைக்கோவில் அடிவாரம் வண்டாடும் பொட்டலில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் ரமேஷ் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் திருமலைக்குமாராசாமிக்கு தீப ஆராதனைகளை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா என பக்தி முழக்கமிட்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *