அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் தமிழகத்தில் கொஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருப்பதால் ஆற்று பாலத்தை பாதுகாப்பாக கடக்குமாறு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள்

Loading

திருவள்ளூர் நவ 01 :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அம்மம்பள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது. இதனையடுத்து ஆந்திர மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 200 கன அடி வீதம் இரண்டு மதகுகள் வழியாக நீர் திறந்துவிடப்பட்டது.
தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலங்களைக் கடக்கும் போது பாதுகாப்பாக கடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொசஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரானது பூண்டி நீர் தாக்கத்தை விரைவில் வந்தடையும் என பொது பணித்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *