சேலம் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து முடித்த 1594 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Loading

சேலம் ஏ, வி,ஆர் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரியில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கல்லூரி தலைவர் திரு வள்ளியப்பா தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதனை அடுத்து சிறப்பு விருந்தினராக  எமரிட்டஸ் பேராசிரியருமான உயிரியல் அறிவியல் தேசிய மையத்தின் முன்னாள் இயக்குனருமான பத்மஸ்ரீ டாக்டர் கிருஷ்ணசுவாமி விஜயராகவன் கலந்துகொண்டு 15 பட்டதாரிகளுக்கு முனவர் பட்டங்களையும் ராங்க் ஹோல்டர்  என 40 மாணவ மாணவிகள் உள்பட 1594 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கௌரவித்தார்.
சிறப்பு விருந்தினர் கிருஷ்ணசாமி விஜயராகவன் பேசுகையில் இந்த கல்லூரி சிறந்த உட் கட்டமைப்பு கொண்டது ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால் ஒரே வருடத்தில் பல விருதுகளை பெற்றுள்ளது என்றார் மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டு வரும் கல்லூரியால் இங்கு படித்த மாணவர்கள் எங்கு சென்றாலும் தனி சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நட்பெயரை பெற்று  வருகிறார்கள் என்றும் இக்கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அதிக சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார் இந்த நிகழ்ச்சியில் 2000 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அவரவர் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பட்டங்களை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றது குறிப்பிடத்தக்கது
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *