தலைவாசல் அடுத்த புதிய தார்சாலை அமைத்து தரும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோவில் முதல் செல்லியம்பாளையம் பிரிவு ரோடு வரை உள்ள பகுதியில் பொதுமக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் இருப்பதை சுட்டி காட்டி அதனை சரி செய்யும் பொருட்டு மீண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல் பள்ளி வாகனங்கள் சுமார் 10க்கும் மேல் செல்கிறது. கடந்த ஆண்டு தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது. தேர்தல் சமயங்களில் வாக்கு சேகரிப்பு மட்டும் நடைபெறுகிறது. ஆனால் எங்கள் பகுதி பிரச்சனைகளை தீர்க்க எவரும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்