இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜனவரி 20, 2022
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் சுக ஸ்தானத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சாதகமான இடங்களில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வெற்றிகரமான நாளாக அமைந்துள்ளது.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீடுகளில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியிலும் பிற்பகலுக்கு மேல் ராசிக்கு இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். வருமானம் இரட்டிப்பாகும்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருவதால் பணவரவுடன் குடும்பத்தில் திடீர் சுப செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிடைக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் காலை வரை எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சந்திராஷ்டமம் முடிந்த பின்னர் மனஅமைதி ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
மகரம்
சந்திரன் காலை 8.20 வரை ஏழாம் வீட்டிலும் அதற்கு மேல் எட்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு காலை 8.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மீது தேவையில்லாத கோபம் உண்டாகும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் சாதகமான நிலையில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை நீங்கும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடியால் மனஉளைச்சல் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.