இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் ரூ.1,28,000/- மற்றும் 2 கிராம் தங்க கம்மல் அடங்கிய பை திருட்டு

Loading

சென்னை, விருகம்பாக்கம், சின்மையா நகர், சித்திரை தெருவில் வசித்து வரும் நடராஜன், வ/64, த/பெ.சாமிநாதன் என்பவர் கடந்த 29.12.2021 அன்று மதியம் சுமார் 11.30 மணியளவில் மேற்படி அவரது வீட்டினருகே காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு கடைக்கு வெளியே, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் ரூ.1,28,000/- மற்றும் 2 கிராம் தங்க கம்மல் அடங்கிய பையை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நடராஜன், R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்ட சரவணராஜ், வ/46, த/பெ.சுரேந்திரன், 4வது தெரு, ராஜமங்கலம், வில்லிவாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.80,000/- மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சரவணராஜ் கடந்த 17.08.2020 அன்று R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அசோகன், வ/65, த/பெ.சீனிவாசன், LNT காலனி, விருகம்பாக்கம் என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் ரூ,50,000/-ஐ திருடிச் சென்றதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே K-10 கோயம்பேடு மற்றும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையங்களில் 2 திருட்டு வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்ட சரவணராஜ் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *