திருவள்ளூரில் லோக் அதாலத் மூலம் ஓரே நாளில் 2,169 வழக்குகளுக்கு தீர்வு : ரூ.10 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது :
திருவள்ளூரில் லோக் அதாலத் மூலம் ஓரே நாளில் 2,169 வழக்குகளுக்கு தீர்வு : ரூ.10 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது :
திருவள்ளூர் ஜூலை 12 : திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள்,மோட்டார் வாகன விபத்து வழக்குகள்,குடும்ப நல வழக்குகள்,காசோலை வழக்குகள்,குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.அதேபோல் பூந்தமல்லி,பொன்னேரி,திருத்தணி,அம்பத்தூர்,திருவொற்றியூர்,பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி,மாதவரம் ஆகிய கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள 2,361 வழக்குகள் சமரச தீர்வு எடுக்கப்பட்டு அவற்றில் 2,169 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.10 கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சுபத்தராதேவி,குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம்,மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவர் கோ.சரஸ்வதி,மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எம்.ரவி,மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆர்.உமா,மோட்டார் வாகன விபத்து சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.அருந்ததி,நில ஆர்ஜித சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சுதாராணி,முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி எம்.விக்னேஷ் பிரபு,கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி,குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் வி.ராதிகா மற்றும் வழக்கறிஞர்கள்,வங்கி அலுவலர்கள்,நீதிமன்ற ஊழியர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.