கள்ளக்காதலியின் மகனை துப்பாக்கியால் சுட்ட கள்ளகாதலன் கைது

Loading

பாலக்கோடு, ஜுலை. 12-

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளிஅருகே தொட்டபடகாண்டஅள்ளியில் கள்ளக் காதலியின் மகனை துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்ற கள்ள காதலனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிடமேஸ்தி முருகன் (45)இவரது மனைவி சுசிலா (39) இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் விஜயகாந்த் (38) என்பவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுசிலா வின் மகன் தினேஷ்குமார்(21) கடந்த மாதம் 11ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக மறைந்திருந்து சுசிலா வின் கள்ளக் காதலன் விஜயகாந்த் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றார். இதில் தினேஷ்குமாருக்கு கால் மற்றும் வயிற்று பகுதியில், அடிப்பட்டு சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (37 )என்பவருக்கும், தினேஷ்குமாரின் அம்மா சுசிலா (39) விற்கும், கள்ளகாதல் இருந்துள்ளது. இதற்கு இடையூறாக தினேஷ்குமார் இருந்துள்ளதால், அவரை தீர்த்தக்கட்ட முடிவு செய்த விஜயகாந்த் கள்ளத் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது விரைந்து சென்ற போலீசார் விஜயகாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *