தமிழகத்தில் கொரனோ வைரஸ் தற்போது 2வது அலை

Loading

தமிழகத்தில் கொரனோ வைரஸ் தற்போது 2வது அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில் தற்போது ஞாயிற்றுகிழமை இன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரனோ வைரஸ் பொது மக்களை பாதுகாக்க ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு பின்பற்றபட்டன . அரசு பேருந்துகள் தனியால் வாகனங்கள் இயக்கபடவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கபட்டு இருந்தன. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான பால் மற்றும் அம்மா மருந்தகம் மற்ற மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பொது ஊரடங்கினை தொடர்ந்து பொது மக்கள் யாரும் வெளியே வரவில்லை. நீலகிரி மாவட்ட இந்த பொது ஊரடங்கில் நீலகிரி மாவட்ட நிர்வாகம துறை சிறப்பாக பணிகளை மேற்கொண்டன. பொது ஊரடங்கினை தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையின் கீழ் நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *