ஆசிரமத்துக்கு வைத்த சீல் உடைப்பு- நித்யானந்தா சீடர்கள் 7 பேர் கைது!

Loading

ராஜபாளையம் அருகே நித்யானந்தா ஆசிரமத்துக்கு வைத்த சீலை உடைத்த 7 சீடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான 2 நிலங்கள் நித்யானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கப்பட்டு அந்த இடங்களிலும் ஆசிரமம் அமைத்து நித்யானந்தா சீடர்கள் வழிபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நித்யானந்தா மீது எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, தானமாக வழங்கிய நபர் அந்த தான பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அந்த இடங்களை இரு தரப்பை சேர்ந்தவர்களும் பயன்படுத்தக்கூடாது என ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து இந்த உத்தரவுப்படி தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பெண் சீடர்களை வெளியேற்றி ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.

இந்தநிலையில் இந்த சீலை உடைத்து ஆசிரமத்திற்குள் சீடர்கள் சென்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் சீடர்கள் உதயகுமார், தீபா, பிரேமா, ஆத்மானந்தா சாமி உள்ளிட்ட 7 பேர் மீது ராஜபாளையம் தெற்கு மற்றும் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

0Shares