திருவள்ளூரில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்கள் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு :

Loading

திருவள்ளுர் மார்ச் 05 : இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்;டு, திருவள்ளுர் லட்சுமிபுரம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியாருமான பா.பொன்னைய தலைமையில் பயிற்சிக்குரிய இயந்திரங்களில் அதற்கான வில்லைகள் ஒட்டி பயிற்சிக்கு வழங்கப்பட்டது.இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது :

திருவள்ளுர் மாவட்டத்தில் 6564 கண்ட்ரோல் யூனிட்டுகளும், 8388 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 6452 வி.வி.பி.ஏ.டி. இயந்திரங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 5 சதவிகித அளவில் மொத்தம் 245 பேலட் யூனிட்களும், 245 கண்ட்ரோல் யூனிட்களும், 245 வி.வி.பி.ஏ.டி இயந்திரங்களும் ஆக மொத்தம் 735 இயந்திரங்கள் இவ்விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. மொத்தம் உள்ள 4902 வாக்குச்சாவடிகளில் 5 சதவிகித என்ற அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு 23,528 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 500 எண்ணிக்கையிலான மண்டல அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்கள் பணிகளில் ஈடுபடவுள்ளனர் என்று கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, வட்டாட்சியர்கள் செந்தில் (திருவள்ளுர்), மணிகண்டன் (பொன்னேரி), செல்வம் (ஆவடி), ஜெயராணி (திருத்தணி), துணை வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *