பாலக்கோட்டில் அரசுபேருந்து பழுதானதால் பயணிகளை கீழே இறக்கி தள்ள வைக்கும் அவலநிலை…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து பெல்ரம்பட்டி சீரியம்பட்டி பாலக்கோடு ஆகிய கிராமங்களுக்கு காலை முதல் இரவு வரை இங்கு கூடிய அரசு பேருந்து மதியம் ஒரு மணி அளவில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் இருந்தபோது திடீரென்று அரசுபேருந்து பழுதானதால் பேருந்து நடத்துனர் பயணிகளை கீழே இறக்கி பழுதான பேருந்தை தள்ள வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதுபோன்ற பேருந்துகளை சீர்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பயணிகளின் கோரிக்கை.