சக்கா ஜாம் என்ற பெயரில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயி சங்கங்கள் அறிவிப்பு!

Loading

டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 மாதங்களுக்கு மேலாக போராட்டி வரும் விவசாயிகள், டெல்லியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்போவதில்லை என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. எனினும், நாட்டின் பிற பகுதிகளில் ஏற்கனவே அறிவித்தபடி, மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *