கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி….

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்து கொண்டார். அவருடன் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கின்றேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கின்றேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர்….

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *