வேலை வாய்ப்பில் வழிகாட்டி – தொழிற்கல்வி ஆசிரியர்கள் திருவள்ளுவர் பல்கலை கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாராட்டு.

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சனிக்கிழமை பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பணி உயர்வு புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா வேலூர் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் எம் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் டி.சண்முகம் ச.சச்சிதானந்தம் முன்னிலை வகித்து பேசினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மாநில பொதுச்செயலாளர் என். ரவி மாநில ஒருங்கிணைப்பாளர் பி திருநாவுக்கரசு துணைத்தலைவர் கே.நட்பாளன், அமைபுச்செயலாளர் எஸ்.துரைராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.பணி நிறைவு பெற்ற நிர்வாகிகள் மாநில அமைப்புச் செயலாளர் சோ சம்பத் மேனாள் தலைவர் த.ராமச்சந்திரன் வேலூர் மாவட்ட தலைவர் எஸ்.சிவராஜ் கல்வி மாவட்ட நிர்வாகிகள் எஸ். கலைச்செல்வன், எ.வேலாயுதம் டி ராகவன் ஜெ.ராமச்சந்திரன் மற்றும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கே.ராஜா, பணிநிறைவு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் கே.மாலதி, தமிழ்செல்வி, டி.ராஜகுமாரி, ஜெ.சந்தானம், வி.பலராமன், மாநில மாவட்ட நிர்வாகிகள் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், என்.ரவி, திருநாவுக்கரசு, எம்.பாண்டுரெங்கன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு கேடயம் வழங்கி வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.விஜயராகவன் பாராட்டி பேசினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *