ராஜாஸ் கார்டன் பகுதியில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயரை சேர்க்க கோரி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு :

Loading

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி வானகரம் ஊராட்சியில் உள்ள ராஜாஸ் கார்டன் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 700 வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் பெயரை சேர்க்க வலியுறுத்தி முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தென் சென்னை திமுக மாவட்ட செயலாளருமான மா. சுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிகளை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டத்தையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிகழ்வின் போது மதுரவாயல் தெற்கு பகுதி செயளாலர் சா.கணபதி, வடக்கு பகுதி செயலாளர் ராஜன்,வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரைவீரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *