தலைமை அலுவலகத்துக்கு சீல் வைப்பதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

Loading

திருச்சி: தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் சென்னை மண்ணடியில் செயல்பட்டு வருகிறது. “எதிரி சொத்து” என்ற அந்தஸ்தில் இருக்கும் இந்த அலுவலகம் அரசு பராமரிப்பில் உள்ளது. அதற்கான வாடகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தை கையகப்படுத்தும் வகையில் சீல் வைக்க அரசு முயற்சி செய்துள்ளது. அப்போது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சீல் வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜாகீர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *