கடலூர் மாவட்டம் ஜவான்ஸ்;;பவன் சாலை சீரமைக்கும் பணியினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தொடங்கிவைத்தார்.

Loading

கடலூர் மாவட்டம் ஜவான்ஸ்;;பவன் சாலை சீரமைக்கும் பணியினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தொடங்கிவைத்தார்.

கடலூர் மாவட்டம் ஜவான்ஸ்பவன் சாலை சீரமைப்பதற்கு பூமி பூiஐ செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி ,இஆப,அவர்கள் தலைமையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் பணியினை தொடங்கிவைத்தார்.கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை-குண்டுசாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு மாற்றுப்பாதையாக அமைப்பதற்கு ஜவான்ஸ்பவன் சாலையை 1.8 கிலோமீட்டர் தூரம் சீரமைக்கும் பணியினை ரூ.196.50 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த சாலையை மேம்படுத்துவதன் மூலம் கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்.ஜவான்ஸ்;பவன் நெடுஞ்சாலை துறை மூலம் விரிவாக்கம் செய்து பராமரிக்கப்படும், இந்த பணி விரைவாக துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) திரு.முருகேசன், ஒன்றிய குழுத்தலைவர் திரு.தெய்வபக்கிரி, கடலூர் வட்டாட்சியர் திரு.பலராமன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *