வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டகர்ப்பிணி பெண்ணிற்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திரையில் தோன்றாதது பற்றி மிருணாள் தாகூர் மனம் திறந்துள்ளார். முழுவதுமாக ஒரு படத்தில் கவனம் செலுத்தாமல் பல படங்களில் கையெலுத்திடுபவள் நான் அல்ல என்றும் நீண்ட காலம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான
“விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது என்றும் ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும் என படக்குழுவினருக்கு இயக்குனர்
சென்னை: நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் திமுக துரோகம் செய்து கொண்டிருக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர்
சென்னை: 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின்
தோராய பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஃபெயிரா பாராட்டு. . சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம். மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நத்தம் நிலம் சம்பந்தமாக, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பில் சரியான முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்திடும் வகையில், நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சட்டப்பேரவையில் சிறப்புமிகு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இத்தருணத்தில் தூய பட்டா மற்றும் தோராய பட்டா குறித்த தெளிவான விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்தும் பதிவிடுவது சிறப்பானதாக இருக்கும். தூய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டாவாகும். ஆனால் தோராய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டா அல்ல. பெயருக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஏக்கர் கணக்கிலோ அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு நிலங்களாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வகையான நத்தம் நிலங்களில் அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலத்தினை அளவீடு செய்து அரசாங்கத்தால் வழங்கப்படுவதைதான் தோராய பட்டா என்று குறிப்பிடுகிறோம். மேலும் மேற்கூறிய வகையில் வகைப்பாடு செய்யப்பட்டிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஏரி, குளம், வீடு, தெரு, என வகைப்படுத்தி அதற்கான வரைபடம் மற்றும் புதிய சர்வே எண்களை கொடுத்து நிலவரித் திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். இதன் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தி அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படுவதின் மூலம் அந்த நிலங்கள் நிலவரி விதிப்புக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டே இருந்து வருகிறது.