கோவையில் தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு

Loading

தாய்ப்பால் ஊட்டுதலும், அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில், தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ராவ் மருத்துவமனை சார்பாக நடைபெற்றது
கோவை ஆர். எஸ். புரத்தில் செயல்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையான ராவ் மருத்துவமனை சார்பில், கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக “தாய்ப்பால் ஊட்டுதலும் அதற்கு அப்பாலும்” என்ற தலைப்பில் தாய்ப்பால் ஊட்டுதல், பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை உணவளிப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எஃப்.ஐ.சி.சி.ஐ. ஃபுளோ கோவை, கோவை ஆக்ருதி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை இன்னர் வீல் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, குழந்தை பிறந்த பின் ஆரம்ப மாதங்களில் தாய்மார்கள் தன்னம்பிக்கையுடன் குழந்தையைப் பராமரிக்க தேவையான நடைமுறை அறிவை வழங்குவதாக அமைந்தது. நிகழ்ச்சியில் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் கே. எஸ். கிருஷ்ணசாமி, பாலூட்டல் ஆலோசகர் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து நிபுணரான பேபி ஸ்ரீ ஆகியோர் சிறப்புரையாற்றினர். தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பான பொதுவான சந்தேகங்கள், பிறந்த குழந்தைகளின் உணவளிப்பு முறை, தாய்மார்களின் ஊட்டச்சத்து, துணை உணவுகளை அறிமுகப்படுத்தும் சரியான காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணரான டாக்டர் பி. சுகன்யா கதிர், பிரசவத்திற்குப் பிந்தைய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares