குதிரையேற்ற போட்டியில் இளம் வீரர்கள் சாதனை

Loading

கோவை
ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை படைத்துள்ளதாக கோவை நவ இந்தியா பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்..
கோவை, ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த, இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு, கோவை அவிநாசி சாலையில் உள்ள ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது.   ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்தி பாலாஜி மற்றும் இந்நிறுவனத்தின் இயக்குனர் பாரதி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது. கடந்த 9 ஆண்டுகளாக  ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 18 வயதுக்குட்பட்டோருக்கான  ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வருவதாகவும், இப்போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துவருவதாகவும் தெரிவித்தனர்.
அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், 250 திறமைமிக்க  மிகச்சிறந்த இளம் குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்ற நிலையில் அதில் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ மாணவர்கள் 10 பேர் கலந்துகொண்டு, 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என பல பதகங்களை குவித்துள்ளதாகவும், ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸாஜ் எனும் 2 வேறு குதிரையேற்ற போட்டிகளில் சிறந்த பங்களிப்பை இம்மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.
பலமான போட்டியாளர்களுக்கு மத்தியில், இம்மாணவர்கள்  தங்களது நுட்பமான துல்லியம், சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். மேலும்  தேசிய அளவில், கோவை மாவட்டம் முதல் 3 இடங்களில் உள்ளது எனவும் இதற்கான சிறந்த வீரர்களை இப்பயிற்சி மையம் தொடர்ந்து உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தனர்
0Shares