நல்வாழ்வுத்துறை நலம்காக்கும் ஸ்டாலின் முகாம்

Loading

கன்னியாகுமரி

 

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாமினை   கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள்           நேரில் பார்வையிட்டு ஆய்வு

 

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் செந்தரை ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  (29.11.2025) அன்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சுகாதாரத்துறையில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும்முன் காப்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 02.08.2025 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமினை தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்தார்கள்.

தொடர்ந்து இன்று கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட கீழ்குளம், கருங்கல், பாலப்பள்ளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் இனயம், மிடலாம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்காக செந்தரை ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், பொது மருத்துவம் கண்கள் காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் இருதய நிபுணர், எலும்பு முறிவு, நரம்பியல் சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட 17 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பரிசோனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது. மருத்துவப் பயனாளிகளின் வருகை பதிவு, மேற்கொள்ளும் சிகிச்சைகள் என அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறதா எனவும், ஒவ்வொரு மருத்துவப் பயனாளிக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் சிகிச்சைகள் பதிவு செய்யப்படுகிறதா எனவும், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது.  மேலும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில் கூமார் 2200 மருத்து பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.  மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்கள்.

நடைபெற்ற மருத்துவ முகாமில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவி,  மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் திரு.தினேஷ் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர், முகாம் ஒருங்கிணைப்பாளர், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்

0Shares