கண்மாய் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு!

Loading

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், கண்மாய் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள திம்மரச நாயக்கனூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் இடம் குறித்து தேர்வு செய்து,அதனைத் தொடர்ந்து கதிர் நரசிங்கபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள நாகலாறு ஓடையில், மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து விவசாய நிலங்களில் நீர் தேங்குவதை தடுக்கும் விதமாகவும் ,அதிகாரி கண்மாய்க்கு தங்கு தடை இன்றி நீர்வரத்து ஏற்படவும், ஓடைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது குறித்தும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனை அடுத்து மொட்டனூத்து ஊராட்சி, ரோசனம்பட்டி கிராமத்தில் பொதுமக்களுடன் கிராமத்திற்கு வேண்டிய வசதிகள் குறித்து கலந்த ஆலோசனை நடத்தினார்.அப்போது கிராம மக்கள் தங்கு தடையின்றி குடிநீர் வசதி வேண்டுமென்றும், சாலை வசதி வேண்டுமென்றும் ,பள்ளி குழந்தைகள் நகர் பகுதிகளுக்குச் செல்ல குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து வசதி வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர்களுக்கு தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ ,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் மகாராஜன் , ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து , திமுக மாவட்ட பிரதிநிதி பொன்னுத்துரை, திம்மரச நாயக்கனூர் அறநிலையத்துறை அறங்காவலர் ராம்குமார், வட்டார விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares