கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பறிமுதல்ளை அதிகப்படுத்துவது குறித்தும், ஆந்திரபிரதேச மாநில எல்லையை யொட்டி உள்ள சோதனை சாவடிகளில் குடித்து விட்டு வருபவர்களின் மீதுவழக்கு (Drunk and Drive) பதிவுகள் அதிகப்படுத்துவது குறித்தும், பொன்னேரி காவல் நிலைய போதை பொருட்களின் பறிமுதல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பறிமுதல்களை அதிகப்படுத்துவது குறித்தும்,. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திட்ட அட்டவணையிட்டு அனைத்து பள்ளிகளிலும் தீவிர விழிப்புணர்வு பிராச்சாரம் மேற்கொள்ளவது, தணிக்கை மற்றும் பறிமுதல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை அதிகப்படுத்துவது குறித்து • DRUG- FREE TAMILNADU APP-நிலுவையில் உள்ள புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வது குறித்தும், • அருகருகில் உள்ள மதுபானகடைகளை இடமாற்றம் செய்யவும் , • மதுபான கடைகளிள் பீர் விற்பனை சதவிகிதம் எதிர்மறையாக உள்ள கடைகளை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவது குறித்தும்,

கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக சோதனைகளை அதிகரிப்பது குறித்தும்,.மற்ற மாநிலங்கிளின் மதுபாட்டில்களின் புழக்கம் அதிகமில்லாமல் இருக்க சோதனைகளை அதிகரித்து மற்ற மாநிலங்களின் மதுபாட்டில்களை பறிமுதல் செய்வது குறித்தும், மாத்திரை மற்றும் மருந்து வடிவிலான போதை பொருட்கள் புழக்கம் தடுப்பது குறித்தும், •உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடை ஆகிய இடங்களில் சோதனைகளை அதிகரிப்பது குறித்தும், • கிராம அளவில் மற்றும் வட்ட அளவில் நியமிக்கப்பட்ட குழுக்களை செயல்படுத்தி, இதன் மூலம் இரகசிய தவகல்களை பெற்று காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் வருவாய்த்துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை முழுவதுமாக முடக்கம் செய்ய அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது குறித்தும். மேலும், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களும், கலால் பிரிவு அலுவலர்களும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலர்களும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் அறிவுறுத்தினார்.

இதில் உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் ரேணுகா (கிழக்கு) முத்துராமன் (மேற்கு), வருவாய் கோட்டாட்சியர்கள்; ரவிசந்திரன் (திருவள்ளூர்), கனிமொழி (திருத்தணி), மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மண்டல மேலாளர் டாஸ்மாக் (கிழக்கு,மேற்கு) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares