எதிர்திசையில் அதிவேகமாக சென்ற பேருந்து..அலறிய வாகன ஓட்டிகள்..கண்டுகொள்ளுமா காவல்துறை?
அரியாங்குப்பம், பழைய புதுச்சேரி – கடலூர் சாலையில் ஓம் சாந்தி பஸ் எண் – PY.05.H.9282 கொண்ட பேருந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில், எதிர்திசையில் அதிவேகமாக சென்றதால் அவ்வழி செல்வோர் அச்சத்தில் திகைத்தனர்.
பிரென்ச் கலாச்சாரமும் தமிழ் கலாச்சாரமும் ஒன்றிநிறைந்த னியமாக மாநிலமாக புதுச்சேரி மாநிலம் உள்ளது. சுற்றுலா தளத்துக்கு பேர் போன புதுச்சேரி மாநிலத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தது புதுச்சேரியின் பிரெஞ்சு கலாச்சார மற்றும்அதன் அழகை ரசித்து செல்கின்றனர் .இந்த மாநிலத்தில் வாரம் தோறும் வெள்ளி, சனி ,ஞாயிறு அன்றைய தினம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும், அப்போது போக்குவரத்து நெரிசல்களும் அதிகமாக இருக்கும், ஹோட்டல்கள் ,வணிக வளாகங்கள், தியேட்டர்கள் பொழுதுபோக்கு பூங்கா போன்றவைகளில் அதிகமான மக்களை காண முடியும், இப்படி சுற்றுலாவுக்கு பெயர் போன புதுச்சேரி மாநிலத்தில் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுவது உண்டு, பலர் சிக்னல்களை மதிக்காமல் செல்வதும், விதிமுறைகளை மீறி சாலைகளில் வாகனங்களை இயக்குவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனை போலீசார் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி,நேற்று ( நவ-17) மாலை அரியாங்குப்பம், பழைய புதுச்சேரி – கடலூர் சாலையில் ஓம் சாந்தி பஸ் எண் – PY.05.H.9282 கொண்ட பேருந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில், எதிர்திசையில் அதிவேகமாக சென்றதால் அவ்வழி செல்வோர் அச்சத்தில் திகைத்தனர்.
நாம் விபத்து நடக்காமலிருக்க சாலை போடவும், சாலை ஆக்கிரமிப்பை அகற்றவும், தெரு விளக்கு எரியவும், சென்டர் மீடியன் அமைக்கவும் புகார்கள் மூலம் முயற்ச்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இது போன்ற விதிமுறைகளை, மீறி அதிவேகமாக செல்லும் வாகனத்தினால் விபத்து நேரிடுகிறது.
இது போல் செல்லும் வாகனத்திற்கு போக்குவரத்துதுறை RTO கொடுக்கும் தண்டனை மற்ற விதி மீறும், வாகனங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று புதுவை சமூக ஆர்வலர்கள் புதுச்சேரி,போக்குவரத்து காவல்துறையின் பார்வைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.