திடீரென விமானம் விழுந்து பயங்கர விபத்து..பயணிகள் கதி என்ன?

Loading

அகமதாபாத்தில் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து அச்சம் நிலவுகிறது.அடுத்த கட்ட தகவல்களில் முழு விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0Shares