கீரை கொள்முதலில் மோசடி..இன்று பணி ஓய்வுபெற இருந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு!

Loading

தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்ததாக இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார்,

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த டாக்டர் ஸ்ரீபத்மாவதி, நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதற்காக வழங்கப்படும் கீரை கட்டு கொள்முதல் செய்ததில் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

புகாரை அடுத்து இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தியதில் ரூ.25 ரூபாய் மதிக்கத்தக்க ஒரு கிலோ கீரை கட்டை 80 ரூபாய்க்கு வாங்கி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் ஸ்ரீ பத்மாவதி தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார்.

இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டை ரூ.80 வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி என்.ஓ.சி. கொடுத்தது. இதனால் கடுப்பான பத்மாவதி இந்த சான்றிதழை மாற்றம் செய்து தனது பணியில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனைக்கு கேட்டபோது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என கூறினர். இதனால் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர், ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்தார்.

பத்மாவதி இன்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் நேற்று அவரை ‘சஸ்பெண்டு’ செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

0Shares