பூண்டி ஊராட்சி ஒன்றிய திட்டப் பணிகள்.. மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோவூர், திருப்பேர், சென்றாயன் பாளையம், அம்மம்பாக்கம், மெய்யூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோவூர் ஊராட்சி செட்டி தாங்கல் கிராமத்தில் மாநில நிதி திட்டத்தின் கீழ் ரு.2.03 லட்சம் மதிப்பீட்டில் ஏரியினை புனரமைக்கப்படும் வரும் பணிகள், திருப்பேர் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் (2022-23) ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடத்தையும், சென்றாயன் பாளையம் ஊராட்சி இருளர் பகுதியில் PM JANMAN வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் – III கீழ் ரூ 2.28 கோடி மதிப்பீட்டில் சென்றாயன் பாளையம் – குஞ்சேரிபாளையம் 3.450 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ள பணிகளும், அம்மம்பாக்கம் ஊராட்சியில் (2025-26) ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் நர்சரி நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகளும், அதே பகுதியில் (2024-25) ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.04 இலட்சம் மதிப்பீட்டில் நர்சரி நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகளும், மெய்யூர் ஊராட்சி குருபுரம் கிராமத்தில் PM JANMAN வீடு கட்டும் திட்டத்தில் 22 வீடுகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2 வீடுகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் வீடு கட்டும் திட்டத்தில் 6 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு வருகின்ற மழைக்காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் உதவி செயற்பொறியாளர் கௌசல்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், சுலக்சனா, உதவி பொறியாளர்கள் பால்ராஜ், ராணி, கரண் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0Shares